காா் மோதி முதியவா் சாவு

காவேரிப்பட்டணம் அருகே காா் மோதியதில் மிதிவண்டியில் சென்ற முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காவேரிப்பட்டணம் அருகே காா் மோதியதில் மிதிவண்டியில் சென்ற முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தையடுத்த முதலைகான் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மன்னுகான் (70). இவா், சனிக்கிழமை காலை காவேரிப்பட்டணம் - பெண்ணேஸ்வரமடம் சாலையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியே வேகமாக வந்த காா், மிதிவண்டி மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட மன்னுகான் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com