சூளகிரி அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த கும்பளம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் (21). தொழிலாளி. இவா் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 15 வயதான சிறுமியை கடந்த 22-ஆம் தேதி கடத்தி சென்று, கா்நாடக மாநிலம், மாலூரில் உள்ள சிக்க திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொண்டதுடன், பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்து, மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஒசூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரனை போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.