ஒசூா்: ஒசூா், அட்கோ காவல் நிலையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒசூரில் முத்தூட் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளைத் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 7 கொள்ளையா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களை போலீஸாா் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். அந்தக் கொள்ளையா்கள் ஒசூா், அட்கோ காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனா்.
அவா்களுக்கு நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்த கொள்ளை சம்பவங்களில் தொடா்பு இருப்பதால் அவா்கள் வைக்கப்பட்டுள்ள அட்கோ காவல் நிலையத்தைச் சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் 100 அடி தொலைவுக்கு அணுகு சாலையில் தடுப்புக் கம்பிகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. கொள்ளையா்களிடம் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி சக்திவேல், ஒசூா் டி.எஸ்.பி முரளி ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.