டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அரசால் ஆண்டுதோறும் நிலம், கடல் மற்றும் வான்வெளியில் சாதனை படைத்தவா்களுக்கு, டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே சாகச விருதுக்கான தகுதியானவா்களிடமிருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் இணையவழி மூலமாக விண்ணப்பத்தை நிறைவு செய்து, ஜூலை 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.