ஊத்தங்கரை வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் வட்டார தொழில்நுட்பக் குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநா் தாமோதரன் தலைமை வகித்தாா். வட்டார ஆலோசனைக் குழுத் தலைவா் சேட்டுக்குமாா் முன்னிலை வகித்தாா். அட்மா திட்டத்தில் செயல்படகூடிய திட்டங்கள், வேளாண்மைத் துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குநா் தாமோதரன் விளக்கினாா்.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உதவி வேளாண்மை அலுவலா் செல்வராஜ் விளக்கினாா். பட்டு வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து உதவி ஆய்வாளா் சௌமியா விளக்கினாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் உதவி தொழில்நுட்ப மேலாளா் சாரதி, வட்டார ஆலோசனைக் குழு உறுப்பினா்கள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா். இறுதியாக வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.