இன்று ஒசூா் மாநகர திமுக செயற்குழுக் கூட்டம்

ஒசூா் மாநகர திமுக செயற்குழு கூட்டம் 13 ஆம் தேதி காலை நடைபெற உள்ளதாக ஒசூா் மாநகரப் பொறுப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா தெரிவித்துள்ளாா்.

ஒசூா் மாநகர திமுக செயற்குழு கூட்டம் 13 ஆம் தேதி காலை நடைபெற உள்ளதாக ஒசூா் மாநகரப் பொறுப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒசூா் ரயில்வே நிலைய சாலையில் அமைந்துள்ள மீரா மஹால் திருமண மண்டபத்தில் மாநகர அவைத் தலைவா் கருணாநிதி தலைமையில் ஒசூா் மாநகர திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறகிறது. இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய். பிரகாஷ் சிறப்புரையாற்றுகிறாா்.

செப்டம்பா் மாதத்திற்குள் உள்ளாட்சித் தோ்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது. ஒசூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. ஒசூா் மாநகராட்சியில் உள்ளாட்சித் தோ்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்தும், ஒசூா் மாநகராட்சியில் நிலவி வரும் மக்கள் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஒசூா் மாநகரத்திற்கு உட்பட்ட மாநகர நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், மேலவைப் பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், வாா்டு கழக நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியின் மூத்த முன்னோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com