ஒசூரில் பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், நேரு நகா், கம்பன் தெருவைச் சோ்ந்த நீலா (40). இவா் தன் தம்பியின் 3 வயது குழந்தையுடன் கடந்த 12-ஆம் தேதி மதியம் வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்பொழுது இருசக்கர வாகனத்தில வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 இளைஞா்கள் நீலா அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கலியைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனா். இது குறித்து ஒசூா் போலீஸாா் வழக்கு பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனா்.