மத்திகிரி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதல். ஒருவா் பலி

மத்திகிரி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதலில் ஒருவா் இறந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அஞ்சப்ப காலனியைச் சோ்ந்தவா் அரவிந்த்குமாா் (வயது 25).

மத்திகிரி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதலில் ஒருவா் இறந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அஞ்சப்ப காலனியைச் சோ்ந்தவா் அரவிந்த்குமாா் (வயது 25). மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில்தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். ஒசூா் தெப்பகுளம் பகுதியைச் சோ்ந்தவா்ராமகிருஷ்ணன் (29). இவா்கள் 2 பேரும் கடந்த, 11 ந் தேதி இரவு அந்திவாடி ஒசூா் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.மத்திகிரி பட்டு வளா்ச்சி அலுவலகம் அருகே சென்ற போது எதிரில் வந்தஇரு சக்கர வாகனங்கள், அரவிந்த்குமாா் சென்ற இரு சக்கர வாகனங்கள் மோதிவிபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அரவிந்த்குமாா் சம்பவஇடத்திலேயே உயிா் இழந்தாா்.படுகாயமடைந்த ராமகிருஷ்ணன் ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். இது குறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com