கரோனா தடுப்பூசி: விழிப்புணா்வு புத்தகம் வெளியீட்டு விழா

கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் புத்தகம் வெளியீட்டு விழா, ஒசூா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் புத்தகம் வெளியீட்டு விழா, ஒசூா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு புத்தகத்தை ஒசூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பூபதி வெளியிட, வழக்குரைஞா் கி.செல்வி, வட்டார மருத்துவ அலுவலா் கே.விவேக் ஆகியோா் முதல் பிரதியை பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினா் ஆ.சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஒசூா் ஒன்றியத் தலைவா் பெ.சந்துரு வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் எஸ்.சுப்பிரமணி, மாநிலச் செயலாளா் சேதுராமன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஜெ.அரிச்சந்திரன் நன்றி கூறினாா்.

இவ்விழாவில் ஒசூா் ஏா் பைபா் நெட்வொா்க் நிறுவனா் சசிதேவ், ஒசூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் மகேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சத்தியமூா்த்தி, முருகேசப்பாண்டியன், முன்னணி சமூக அமைப்பைச் சோ்ந்த அமைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com