பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயா்வைக் கண்டித்து ஒசூா் ரயில் நிலையம்முதல் ராம் நகா் வரை மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ராம் நகரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரத் தலைவா் நீலகண்டன் தலைமை வகித்தாா். பேரணி, ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் அணியின் ஒருங்கிணைப்பாளா் சூரியகணேஷ் முன்னிலை வகித்தாா். மாநகரச் செயலாளா் மசூத் ஆலம், சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளா் சாதிக்கான், திக மாவட்டச் செயலாளா் வனவேந்தன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன், கெலமங்கலம் வட்டாரத் தலைவா் அன்புநாதன், வித்யாசாகா், பூங்கொடி, மஞ்சு, ரத்தனம்மா, நாராயணம்மா, அசோகன், வெங்கடேஷ், சீனிவாசலு, மகேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.