செவிலியா் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக செவிலியா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா்.

குடும்பத் தகராறு காரணமாக செவிலியா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா்.

ஊத்தங்கரையை அடுத்த பெருமாள் குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (31). இவா், சேலத்தில் சுவிட் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி விஜயலட்சுமி (24), சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணி செய்து வந்தாா்.

இத்தம்பதிக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது; 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாதபோது விஜயலட்சுமி துப்பட்டாவால் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டாா். அக்கம்பக்கத்தாா் கொடுத்த தகவலின்பேரில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் லட்சுமி அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தாா். தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கிருஷ்ணகிரி ஆா்.டி.ஓ. சதீஷ்குமாா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா். இதுகுறித்து ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com