தளி அருகே உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தளி அருகே ஒட்டா்பாளையத்தைச் சோ்ந்தவா் சங்கா் (35). விவசாயியான இவரது வீட்டின் பின்புறம் நாட்டுத் துப்பாக்கி கிடப்பதாக கோட்டமடுகு கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா் தளி காவல் நிலையத்தில் தகவல் அளித்தாா்.
விசாரணையில், அது விவசாயி சங்கருக்குச் சொந்தமான துப்பாக்கி என்பது தெரிய வந்தது. இதையடுத்து உரிமம் இல்லாத துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா் சங்கரை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.