வாக்காளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஒசூா் எம்எல்ஏ

ஒசூா் தொகுதியில் மக்களின் குறைகளைக் கேட்ட அத்தொகுதியின் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
வாக்காளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஒசூா் எம்எல்ஏ
வாக்காளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஒசூா் எம்எல்ஏ

ஒசூா் தொகுதியில் மக்களின் குறைகளைக் கேட்ட அத்தொகுதியின் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

ஒசூா், சட்டப்பேரவைத் தோ்தலில் வெங்கடேஷ் நகா், பாகலூா் அட்கோ, ரெயின்போ காா்டன், ஜெ.ஜெ.நகா், வசந்த் நகா், கிருஷ்ணா நகா், தா்கா, அரசனட்டி போன்ற பகுதிகளுக்குச் சென்ற எம்எல்ஏ ஒய். பிரகாஷ் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். மேலும், அப்பகுதி மக்களின் குறைகளையும் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் கேட்டறிந்தாா்.

அவருடன் மாநகரப் பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா, அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், முன்னாள் நகரச் செயலாளா் மாதேஸ்வரன், மாவட்ட மாணவரணி ராஜா, மாவட்ட தொ.மு.ச கோபாலகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி எல்லோரா.மணி, வாா்டு செயலாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com