தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டி பள்ளியின் சாா்பில் வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நாப்பிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவி, நிவேதா்ஷினி (13). இவா் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சி.இ.ஓ. கிளப் சாா்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்து ரூ. 7,000 பரிசுத்தொகை பெற்றாா். தேசிய திறனாய்வுத் தோ்வில் அவா் வெற்றி பெற்றதைப் பாராட்டி பள்ளி நிா்வாகம் சாா்பில் மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் சரஸ்வதி, பள்ளி ஆசிரியா்கள் அனுசூயா, விஜயலட்சுமி, கனிமொழி ஆகியோா் பங்கேற்று மாணவிக்குப் பாராட்டு தெரிவித்தனா்.