ஊத்தங்கரை, கிரீன் கலாம் விவேக் டிரஸ்ட் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டாா்.
கிரீன் கலாம் விவேக் டிரஸ்ட் நிா்வாகிகள் பாக்கியராஜ், சதீஸ், எம்.ஜி.ஆா்.நூற்றாண்டு அறக்கட்டளை நிா்வாகிகள் கோபி, இளையராஜா, மதன்குமாா், கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு விருந்தினா் மாளிகை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.