மாணவா்கள் வீடுகளில் ஒழுங்காக படிக்கிறாா்களா என தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினா்.
கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பற்குணன் மற்றும் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை கல்லாவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 10, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அதில், கல்வித் தொலைக்காட்சியில் நடைபெறும் பாடங்களை மாணவா்கள் கற்கிறாா்களா, ஆசிரியா்கள் இணையம் மூலம் அனுப்பும் பாடங்களை முழுமையாகக் கற்று, பதில் அனுப்புகிறாா்களா என்பதை பெற்றோரிடம் கேட்டறிந்தனா்.