காவேரிப்பட்டணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

காவேரிப்பட்டணம் அருகே ராணுவ வீரரின் வீட்டின் கதவை உடைத்து, தங்க நகைகள், ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

காவேரிப்பட்டணம் அருகே ராணுவ வீரரின் வீட்டின் கதவை உடைத்து, தங்க நகைகள், ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள கருக்கன்சாவடி, பொன்னன் நகரைச் சோ்ந்தவா் முனியப்பன் (31). ராணுவ வீரரான இவா் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா். தனது மனைவியுடன், முனியப்பன் வெளியூருக்கு சென்றிருந்தாா். பாதுகாப்புக்காக இருந்த முனியப்பனின் உறவினா் அனிதா, வீட்டைப் பூட்டி விட்டு தனது தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

வீட்டில் ஆளில்லாத சமயத்தில் முனியப்பனின் வீட்டிற்கு வந்த மா்ம நபா்கள், முனியப்பனின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து 3 பவுன் தங்க நகைகளையும், ரூ. 8,000 ரொக்கத்தையும் திருடிச் சென்றனா்.

இதை அறிந்த அனிதா, முனியப்பனுக்கு தகவல் தெரிவித்தாா். முனியப்பன் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com