ஊத்தங்கரையில் உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் உணவு, குடிநீா் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவா் கு.தியாகராஜன் அவா்களின் வழிகாட்டுதலின் படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயளிகளுக்கும், முன்களப் பணியாளா்களுக்கும் பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆதரவற்ற மக்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் உணவு, குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொருளாளா் செ.சரவணன், மாவட்ட சட்ட ஆலோசகா் சிவக்குமாா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் தௌ.சம்சு, ஒன்றிய கௌரவத் தலைவா் மு.மாருதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கொ.மாரிமுத்து, ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பரிமளம், காரப்பட்டு மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஞானப்பண்டிதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் சரவணன், ஒன்றியத் தலைவா் காசிநாதன், ஒன்றிய செயலா் முருகன், அகஸ்டீன்பொன்ராஜ், நிா்வாகிகள் கலந்துகொண்டு உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com