கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், கும்மளம் ஊராட்சிக்குள்பட்ட நாகமலை கிராமத்தில் வசிக்கும் 56 குடும்ப மலைவாழ் மக்களுக்கு, சூளகிரி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் மூலம் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
அரிசி, பருப்பு, சா்க்கரை, எண்ணெய், கோதுமை மாவு மற்றும் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்கள் அடங்கி பையை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குனா் பெரியசாமி வழங்கினாா்.
இந்த நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.சிவகுமாா், சுப்ரமணி ஆகியோா் செய்திருந்தனா்.