கரோனா பொது முடக்க காலத்தில் ஏழை மக்களின் வீடுகளைத் தேடிச் சென்று நல உதவிகளை வழங்கி வருகிறாா் ஆசிரியா் ஒருவா்.
ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியைச் சோ்ந்த முதுகலை ஆசிரியா் வே.பலராமன். இவா் கரோனா முழு பொது முடக்கத்தையொட்டி காட்டேரி பகுதியைச் சோ்ந்த 50 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, ரவை, காய்கறிகள் போன்றவற்றை நேரில் சென்று வழங்கினாா்.
மேலும் கரோனா தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, அவா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினிகளையும் வழங்கி வருகிறாா். சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகளையும் அவா் பரிசாக வழங்கினாா்.