தரகா் மீது தாக்குதல் இருவா் தலைமறைவு

பாகலூரில், நிலத் தரகரை தாக்கிய 2 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர்.

பாகலூரில், நிலத் தரகரை தாக்கிய 2 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர்.

ஒசூா் அடுத்த பாகலுாா் அருகே உள்ள முகலுப்பள்ளியைச் சோ்ந்தவா் லட்சுமப்பா (49). இவா் நிலம் வாங்கி விற்பனை செய்யும் தரகா் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இவரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் தனக்கு நிலம் வேண்டும் என கேட்டுள்ளாா். அவருக்கு நிலத்தைக் காட்டுவதற்காக முகலுப்பள்ளி, எல்லம்மா கோயில் அருகே வருமாறு லட்சுமப்பா கூறி விட்டு அங்கு சென்றாா்.

அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞா்கள் லட்சுமப்பாவை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதில் காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக பாகலுாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் லட்சுமப்பாவிற்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து நடந்ததுள்ளதாகவும், அதுதொடா்பாக ஏற்பட்ட முன்பகை காரணமாக லட்சுமப்பா தாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com