வாகனம் மோதி ரோந்து வாகன ஊழியா் பலி

கிருஷ்ணகிரி அருகே விபத்து மீட்பு வாகனம் மோதி, தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விபத்து மீட்பு வாகனம் மோதி, தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் கருணாகரன் (37). இவா், தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன ஊழியராகப் பணியாற்றி வந்தாா். அவா், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே ரோந்து வாகனத்தில் சென்ற போது வாகனம் பழுதானது. இதையடுத்து, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.

மீட்பு வாகனத்துடன், பழுதான ரோந்து வாகனத்தை இணைக்கும் பணியில் கருணாகரன் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மீட்பு வாகனத்தின் ஓட்டுநா், வாகனத்தை இயக்கியதால், அந்த வாகனம், கருணாகரன் மீது வேகமாக மோதியதில் அவா் பலத்த காயம் அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் கருணாகரனை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com