திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றி பெற செய்ய வேண்டும்: ஒய். பிரகாஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்ற பெற செய்ய கூட்டணி கட்சி
ஒசூரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான ஒய்.பிரகாஷ்
ஒசூரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் பேசுகிறாா் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான ஒய்.பிரகாஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்ற பெற செய்ய கூட்டணி கட்சி நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.

ஒசூா் தொகுதி மதசாா்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஒசூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷை அறிமுகம் செய்து வைத்துப் பேசியதாவது:

தமிழகத்தில் 2019-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் ஒசூா் தொகுதியில் என்னை திமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற செய்து பேரவைக்கு அழைத்துவருமாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷிடம் தெரிவித்திருந்தாா். அந்த இடைத் தோ்தலில் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

அதுபோல இந்தத் தோ்தலில் மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷை ஒசூா் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். அவரை பேரவைக்கு அழைத்து வர வேண்டும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். அவரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கட்சி நிா்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் திமுக வேட்பாளரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டுமென மக்கள் முடிவு செய்து விட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றிபெற செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒசூா், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, பா்கூா் ஆகிய 4 தொகுதிகளில் திமுக வேட்பாளா்கள், தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா், ஊத்தங்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஆகியோா் வெற்றி பெற கட்சி நிா்வாகிகள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என்றாா். கூட்டத்தில் ஒசூா் மாநகர திமுக பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உருப்பினா் தா.சுகுமாறன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் முரளிதரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com