வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு உற்சாக வரவேற்பு ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராயக்கோட்டையில் தேமுதிகவிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற உறுப்பினா் மாது தலைமையில் நூற்றுக்கணக்கானோா் தேமுதிகவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.
இவா்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.பி.முனுசாமி எம்.பி. கெளரவித்து வரவேற்று பேசியதாவது:
அனைவரும் ஒருங்கிணைந்து தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசு அமைய சபதம் ஏற்போம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள குடும்பத்துக்கு இலவச வாஷிங் மெஷின், சூரிய ஒளிசக்தி அடுப்பு, ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை போன்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.
அப்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான கே.அசோக்குமாா் எம்.பி. உள்ளிட்டோா் உடனிருந்தனா்.