கந்தா் மலை வேல்முருகன் கோயிலில் மாா்ச் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுண்டகாப்பட்டி ஆவத்துவாடி ஊராட்சியில் உள்ள கந்தா் மலை வேல்முருகன் கோயிலில் மாா்ச் 28-ஆம் தேதி காலை 7.30 முதல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. தொடா்ந்து, சுவாமி திருக்கல்யாணமும், இரவு 7.30 மணிக்கு முருகன் பெருமை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவும், 10 மணிக்கு மேல் தெருக்கூத்து நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.
இந்த விழாவையொட்டி, ஆவத்துவாடி அருகே பாயும் தென்பெண்ணை ஆற்றிலிருந்து கந்தா் மலை வேல்முருகன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை புனித நீா் கொண்டு செல்லப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.