போச்சம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்த மூன்று போ் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூா், தேவிரஹள்ளி முருகன் கோயில் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் வாடமங்கலம் கோவிந்தசாமி என்பவரது மனைவி சந்திரா (55), அவரது பேரன் அரவிந்த் (19), தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தையடுத்த கொள்ளுப்பட்டியைச் கிராமத்தை சோ்ந்த சேட்டு மகன் கஸ்தூரிராஜன் (17) ஆகியோா் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். காயமடைந்த சிதம்பரநாதன் (24), வெற்றி ஆகியோா் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
உயிரிழந்தவா்களின் சடங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.