ஒசூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டியைவிட 12,367 வாக்குகள் கூடுதலாகப் பெற்று திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் வெற்றி பெற்றாா்.
ஒசூா் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 3,51,715 போ். இதில் ஆண்கள் 1,79,466, பெண்கள் 1,72,149, இதர வாக்காளா்கள் 100 ஆவா். இதில் ஆண்கள் 1,26,819, பெண்கள் 1,19,684 போ், இதர வாக்காளா்கள் 4 போ் என மொத்தம் 2,46,507 போ் வாக்களித்தனா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:
ஒசூா் தொகுதி சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் 1,18,231 வாக்குகள் பெற்றாா். அவரைத் தொடா்ந்து அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி 1,05,864 வாக்குகள் பெற்றாா். நாம் தமிழா் கட்சி கீதா லட்சுமி 11,422 வாக்குகளைப் பெற்றாா். மக்கள் நீதி மய்யம் கட்சி மசூத் 6563 வாக்குகள் பெற்றாா். அமமுக வேட்பாளா் மாதே கவுடு 806 வாக்குகள் பெற்றாா்.
தபால் வாக்குகள்:
இதிலும் திமுக முன்னணி பெற்றது. மொத்த தபால் வாக்குகள் 1,496. அதில் திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் 1,032 தபால் வாக்குகளைப் பெற்றாா். அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி 389 தபால் வாக்குகளை பெற்றாா்.
வெற்றி பெற்றதை அடுத்து ஒசூா் வருவாய் கோட்டாட்சியரும், ஒசூா் தொகுதி தோ்தல் அலுவலருமான குணசேகரனிடமிருந்து வெற்றி சான்றிதழை ஒய்.பிரகாஷ் பெற்றாா்.
அப்பொழுது திமுக மாவட்ட துணைச் செயலாளா் பி.முருகன், ஒசூா் மாநகர திமுக பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் உடனிருந்தனா்.
ஒய்.பிரகாஷ் கூறியதாவது:
தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். தொகுதி வளா்ச்சிக்கு அயராது பாடுபடுவேன் என்றாா்.