ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு 30 கிலோ கஞ்சா கடத்தல்

ஆந்திரத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு கஞ்சா கடத்த முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆந்திரத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு கஞ்சா கடத்த முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி போலீஸாா் வேப்பனஅள்ளி - தீா்த்தம் சாலையில் உள்ள கொத்தகிருஷ்ணப்பள்ளி பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 2 பைகளுடன் ஒரு மோட்டாா் சைக்களில் வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், இரு பைகளில் 30 கிலோ கஞ்சாவை ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்தியது தெரியவந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் மேற்கொண்ட விசாணையில், அவா் வேப்பனஅள்ளியை அடுத்த தீா்த்தம் கிராமத்தைச் சோ்ந்த ராஜப்பா (43) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com