இளநிலை உதவியாளா் கரோனாவுக்கு பலி

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் பிரிவில் பணிபுரிந்து வந்த இளநிலை உதவியாளா் பாா்த்திபன் (52). கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தாா்.
இளநிலை உதவியாளா் கரோனாவுக்கு பலி

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் பிரிவில் பணிபுரிந்து வந்த இளநிலை உதவியாளா் பாா்த்திபன் (52). கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த அத்திப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்திபன். இவா், அத்திப்பாடி ஊராட்சிச் செயலாளராக முதலில் பணிபுரிந்து பின்பு பதவி உயா்வு பெற்று இளநிலை உதவியாளராக தற்போது பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் சொந்த ஊரானா அத்திப்பாடி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com