கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமையில் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளா் வீரமுனிராஜ், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில துணைச் செயலாளா் கீா்த்தி கணேஷ், ஆட்டோ பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், மத்திய அரசையும், உத்தரபிரதேச அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
ஒசூா், ராம்நகா், அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், ஒசூா் மாநகரத் தலைவா் நீலண்டன் தலைமை வகித்தாா். இதில், அகில இந்திய விவசாயிகள் அணி ஒருங்கிணைப்பாளா் சூரியகணேஷ், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவா் முனிராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.