கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் ஆய்வு

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் முருகேசன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் முருகேசன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் தூய்மைப் பணிகள் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணகிரி வட்டச் சாலை, சேலம் சாலை, சப்-ஜெயில் சாலை, பழைய சென்னை சாலை, காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழிவுநீா்க் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி நிறைவடையும் உள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட கணபதி நகா், பழைய பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் முருகேசன் ஆய்வு மேற்கொண்டாா்.

கணபதி நகரில் சுடுகாடு அருகே புதா்மண்டி மழைநீா் வடிகால் அடைப்பு இருந்த பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் புதா்களை அகற்றி, தூய்மைப் படுத்தும் பணியையும், பழைய பேட்டை குடியிருப்புப் பகுதியில் குடிநீா் முறையாக வழங்கப்படுகிா, இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com