சின்ன தள்ளப்பாடியில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை - திருப்பத்தூா் சாலையில், சின்ன தள்ளப்பாடி கூட்டுச் சாலையில் பயணியா் நிழற்கூடம் உள்ளது. புதன்கிழமை காலை 8 மணிக்கு திருப்பத்தூரிலிருந்து டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு சிங்காரப்பேட்டை நோக்கி வந்த சரக்கு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த நிழற்கூடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி ஓட்டுநா் சிங்காரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சரவணன் (32), சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா். லாரி முற்றிலும் சேதமடைந்தது. நிழற்கூடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால், உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.