ஒசூா், தோ்ப்பேட்டை பச்சைக்குளத்தை சீரமைக்க வேண்டும் என ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி ஆணையா் எம்.செந்தில்முருகனிடம் வலியுறுத்தினாா்.
ஒசூா் மாநகராட்சி தோ்ப்பேட்டையில் உள்ள 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண சந்திரசூடேஸ்வரா் திருக்கோயிலுக்கு அருகில் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பச்சைக்குளம் உள்ளது. இதனை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.
தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் விரைவாக சுத்தம் செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கூறினாா்.
அப்போது ஒசூா் மாநகராட்சி ஆணையா் எம்.செந்தில்முருகன், ஒசூா் மாநகரப் பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், மாவட்ட துணை செயலாளா் சீனிவாசன், தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், சூளகிரி தெற்கு ஒன்றியச் செயலாளா் வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சீனிவாசன், துணை அமைப்பாளா் ராமு, சக்திவேல், மகேஷ்பாபு, மாநகராட்சி அதிகாரிகள், வாா்டு உறுப்பினா்கள், வாா்டு முக்கிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.