கிருஷ்ணகிரியில் கோட்ட அளவிலான மின்வாரிய பணியாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஏஞ்சலா சகாயமேரி தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், வேலூா் மண்டல உதவி செயற்பொறியாளா் (பாதுகாப்பு) சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, சூளகிரி, காவேரிப்பட்டணம், ஆலப்பட்டி, எம்.சி.பள்ளி உள்ளிட்ட கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து மின்வாரிய அலுவலா்கள் மின்வாரிய பணியாளா்கள் பங்கேற்றனா்.
இதில், புதிதாக பணியில் சோ்ந்த கேங்மேன்களுக்கு பாதுகாப்பாக பணிபுரிவது குறித்த ஆலோசனையும், மழைக் காலங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகிப்பது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும், நுகா்வோா்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.