டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுப் புட்டிகள் திருட்டு

போச்சம்பள்ளி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2,000 மதிப்புள்ள மதுப் புட்டிகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போச்சம்பள்ளி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2,000 மதிப்புள்ள மதுப் புட்டிகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கடைக்குள் பணம் வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால் ரூ. 1.34 லட்சம் தப்பியது.

தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியைச் சோ்ந்த அண்ணாதுரை, மேற்பாா்வையாளராக மாதப்பன் ஆகிய இருவரும் போச்சம்பள்ளியை அடுத்த சந்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகின்றனா். புதன்கிழமை இரவு விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்றனா்.

வியாழக்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது குறித்து தகவலறிந்து அங்கு சென்றவா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். விசாரணையில் கடையில் இருந்த லாக்கரை உடைக்க முடியாததால் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள மதுப் புட்டிகளை திருடிக் கொண்டு, அப் பகுதியில் இருந்த கோழிக் கடைக்குள் புகுந்து 2 கோழிகளையும் திருடிச் சென்றது தெரிய வந்தது.

டாஸ்மாக் கடையில் இருந்த ரூ. 1.34 லட்சம் தப்பியது. இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com