கிருஷ்ணகிரி அருகே பக்தர் வழிபடும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் 

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கீழ் பையூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற பக்தர் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பத்தை வழிபட்டு வருகிறார். 
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம்.
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கீழ் பையூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற பக்தர் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பத்தை வழிபட்டு வருகிறார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தெரிவித்தது: கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம், கீழ்பையூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், கோவிந்தசாமி என்பவர் வீட்டில் சுடுமண் விநாயகர் சிற்பம் இருப்பதைக் கண்டறிந்தனர்.
 இந்த சுடுமண் விநாயகர் சிற்பமானது 400 ஆண்டுகள் பழமையானது. இரண்டு அங்குல உயரமே உள்ள இந்த விநாயகர், இரண்டு கைகளை மட்டுமே கொண்டுள்ளார். தலையின் உச்சியில் குடை செறுகுவதற்கான துளையும் உள்ளது. இந்த சிற்பம்  துதிக்கை வலம்புரியாக உள்ளது. குழந்தை போல் அமர்ந்துள்ளார். அடிப்பகுதி குழிவாக உள்ளது. விநாயகர் சிற்பங்கள் பொதுவாக கல் அல்லது உலோகத்திலேயே அதிகம் காணப்படும். 

சுடுமண் சிற்பம் என்பது அரிதான ஒன்றாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. 400 ஆண்டுகள் பழமையான இந்த சுடுமண் விநாயகர் சிற்பம் இந்தமாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். இந்த விநாயகர் சிலையை தற்போது கோவிந்தராஜ் குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றனர். ஆகையால் அவர்கள் இந்த சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்திற்கு தர மறுத்துவிட்டனர். 
வரலாற்று சிறப்புமிக்க இந்த சிற்பத்தை முறையாக பராமரிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com