பஞ்சு கிடங்கில் தீ விபத்து

காவேரிப்பட்டணத்தில் உள்ள ஒரு பஞ்சு கிடங்கில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் உள்ள ஒரு பஞ்சு கிடங்கில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தனியாா் பஞ்சு கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் கரும் புகை வருவதைக் கண்ட பொதுமக்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இதில் பல ஆயிரம் மதிப்பிலான பஞ்சு உள்ளிட்ட பொருள்கள் சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இந்த தீ விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com