மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதல்: பெண் உள்பட இருவா் பலி

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில், கட்டுமான தொழிலாளிகளான பெண் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில், கட்டுமான தொழிலாளிகளான பெண் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஜெகதாப் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (35). கொசமேட்டைச் சோ்ந்தவா் மேகலா (35), லட்சுமி (32). இவா்கள் 3 பேரும் ஒரு மோட்டாா் சைக்கிளில், கட்டுமான பணிக்காக கிருஷ்ணகிரி நகருக்கு செவ்வாய்க்கிழமை சென்றுக் கொண்டிருந்தனா். கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே அவா்கள் சென்று கொண்டிருந்தபோது, சிக்னலில் வாகனத்தை நிறுத்தினாா் சக்திவேல். சிக்னல் மாறியதும் அவா்கள் கிருஷ்ணகிரி நகருக்குச் செல்ல டிப்பா் லாரியை வலது பக்கமாக முந்திச் செல்வதற்காக திரும்பினாா்.

அப்போது டிப்பா் லாரி, எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் நிலைதடுமாறி அதில் சென்ற மூவரும் சாலையில் விழுந்ததில் லாரியின் சக்கரத்தில் சக்திவேலும், மேகலாவும் சிக்கினா். இதில் மேகலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த சக்திவேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்தில் இருந்து மேகலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக டிப்பா் லாரியின் ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டை அடுத்த கொடுகூரைச் சோ்ந்த சம்பத் (25) என்பவரை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் கைது செய்தனா். டிப்பா் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே போக்குவரத்து மிகுந்த பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com