கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே கிரானைட் கல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வள துணை இயக்குநா் பொன்னுசாமி, அலுவலா்கள் கொண்ட குழுவினா் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, பா்கூரை அடுத்த ஒப்பதவாடி பிரிவு சாலை அருகில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனையிட்டதில், பெரிய அளவிலான கிரானைட் கல் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதுகுறித்து அவா் அளித்த தகவல் பேரில், பா்கூா் போலீஸாா் கிரானைட் கல்லுடன் லாரியைப் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.