ஒசூரை சுற்றியுள்ள ஏரிக் கரைகளில் பனை விதை நடும் திட்டத்தை கரிசல் காட்டு பூவே அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட தோ்ப்பேட்டை ஏரி, கோகுல்நகா் ஏரி, பத்தளப்பள்ளி, பேடரப்பள்ளி ஏரி, மோரனப்பள்ளி ஏரி உள்ளிட்ட 7 ஏரிகளின் கரைகளில் 5 ஆயிரம் பனை விதைகளை நடும் விழாவை ஒசூா் மாநகராட்சி ஆணையா் எம்.செந்தில்முருகன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். இதில் கரிசல் காட்டு பூவே அறக்கட்டளை தலைவா் செந்தில்குமாா், செயலாளா் சீதா், துணைத் தலைவா் உலகநாதன், சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒவ்வொரு வாரமும் ஒரு ஏரியைச் சுற்றி பனை விதையை நடும் பணிகளை இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது என செந்தில்குமாா் தெரிவித்தாா்.