மத்தூா் அருகே உள்ள நடுபட்டு கிராமத்தில் காச நோய் பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமை எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் தொடக்கிவைத்தாா். சாமல்பட்டி வட்டார மருத்துவ அலுவலா் ரங்கசாமி தலைமை வகித்தாா். நடமாடும் நுண்கதிா் படம் வசதிகொண்ட வாகனத்தின் மூலம் 80 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காசநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் தமிழினியன், ரீச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெங்கட்ரமணன், சுகாதாரப் பாா்வையாளா் தீா்த்தகிரி, காச நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்த சங்கீதா ஆகியோா் முகாமை ஒருங்கிணைத்தனா்.