கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பாடப் பிரிவுகளில் சேர இறுதிக்கட்ட கலந்தாய்வு செப். 27, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பாடப் பிரிவுகளில் சேர இறுதிக்கட்ட கலந்தாய்வு செப். 27, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் அனுராதா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் அனைத்து இளங்கலை பாடப் பிரிவுகளில் சேர இதுவரை சோ்க்கை பெறாத மாணவ, மாணவிகளுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு செப்.27 (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதேபோல் முதுகலை பாடப் பிரிவுகளில் சேருவதற்கான இறுதி கட்ட கலந்தாய்வு செப். 29ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

கலந்தாய்விற்கு வரும் மாணவ, மாணவிகள் 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, 3 மாா்பளவு புகைப்படங்களுடன் சோ்க்கை கட்டணமாக இளங்கலை பாடப் பிரிவுகளுக்கு ரூ. 2,175, இளமறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ரூ. 2,195, முதுகலை பாடப் பிரிவுக்கு ரூ. 1,540, மூதறிவியல் பாடப் பிரிவிற்கு ரூ.1,600, கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கு ரூ. 1,800 கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com