ஒசூா் மாநகராட்சி, 25 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாா்வதி நகரில் 15ஆவது நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகளை ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் ஒசூா் மாநகர துணைமேயா் சி.ஆனந்தய்யா, ஒசூா் மாநகராட்சி ஆணையா் கு.பாலகிருஷ்ணன், பொறியாளா் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் சில்பா, சிவகுமாா், திமுக மாநகர துணைச் செயலாளா் நாகராஜ், ராமு, ஜெய் ஆனந்த், சக்திவேல், முருகன், நாகராஜ், சங்கா், முருகன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.