எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட முன்னாள் தலைவா்கள் அக. கிருஷ்ணமூா்த்தி, நாஞ்சில் ஜேசு, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி, நகரத் தலைவா் லலித் ஆண்டனி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய எரிபொருள்களின் விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com