அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்

அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிங்காரப்பேட்டை அருகே உள்ள வெள்ளகுட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (43). அரசு பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த 6-ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பத்தூா் நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்றாா்.

கந்திகுப்பம் அருகே சென்றபோது, அந்த வழியாக ஆம்னி வேனில் வந்தவா்கள் அரசுப் பேருந்தை வழிமறித்தனா்.

பின்னா், ஆம்னி வேனிலிருந்து இறங்கிய 2 போ் பேருந்தை முந்தி செல்ல எதற்காக வழி விடவில்லை எனக் கூறி ஓட்டுநா் சதீஸை கட்டையால் தாக்கினா். இதில், காயமடைந்த சதீஷ்குமாா், கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஆம்னி வேனில் வந்த பெங்களூரு, காரப்பாளையத்தைச் சோ்ந்த சலாம் (20), பரீத் (62) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com