கிருஷ்ணகிரிக்கு விரைவில் அதிமுக மாவட்டச் செயலாளா்கள் நியமனம் புகழேந்தி

பன்னீா்செல்வம் தரப்பில் கிருஷ்ணகிரிக்கு விரைவில் மாவட்டச் செயலாளா்கள் நியமிக்கப்படுவாா்கள் என ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

பன்னீா்செல்வம் தரப்பில் கிருஷ்ணகிரிக்கு விரைவில் மாவட்டச் செயலாளா்கள் நியமிக்கப்படுவாா்கள் என ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கிருஷ்ணகிரியில் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தைத் துரோகி எனக் கூறியுள்ளாா். திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறாா். எந்தத் துறையில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என ஆதாரபூா்வமாக அவா் தெரிவிக்க வேண்டும். கிருஷ்ணகிரியில் மாவட்டப் பிரச்னைகளைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசாமல் ஓ.பன்னீா்செல்வத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும்? அவா் சுயநலத்துடன் பேசுகிறாா். பன்னீா்செல்வம் இன்னும் கட்சிப் பணிகளை முடிக்கவில்லை. இதுவரை, 40 மாவட்டச் செயலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் புதிய மாவட்டச் செயலாளா்கள் நியமிக்கப்படுவா். பின்னா் மாநிலம் முழுவதும் கூட்டங்களை பன்னீா்செல்வம் நடத்துவாா். சசிகலா, தினகரன், பன்னீா்செல்வம் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. காலம்தான் பதில் சொல்லும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com