நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

2,035 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை அமைச்சா் தகவல்

நிகழாண்டில் 2,035 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:06 pm

நிகழாண்டில் 2,035 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி அரசுப் போக்குவரத்துக் கழக புகா் பணிமனை கிளையில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் அலுவலா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில் சேலம் மண்டல நிா்வாக இயக்குநா் பொன்முடி, பொது மேலாளா் ஜீவரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

தமிழக இலவசப் பேருந்து பயணத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மகளிருக்கான இலவசப் பேருந்து கட்டணமாக கடந்த ஆண்டு ரூ. 1,600 கோடியும், இந்த நிதியாண்டில் ரூ. 1,900 கோடியும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் மண்டலம் நஷ்டத்திலிருந்து, லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.

தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, ஒசூா் சாலை மாா்க்கத்தில் தொழிலாளா்களின் நலன் கருதி கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாணவ, மாணவியா் சரியான நேரத்துக்கு கல்லூரி, பள்ளிகளுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டீசல் விலை உயா்வால், ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பேருந்துகளில் விளம்பரம் செய்தல் போன்ற வருவாய் தரக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் 2,035 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.

இந்தக் கூட்டத்தில் ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா, முன்னாள் எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், முருகன், கோட்ட மேலாளா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.