ஒசூா் மாநகராட்சியில் தேசியக் கொடி ஏற்றிய மேயா்

75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முறையாக மேயா் எஸ்.ஏ.சத்யா தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காந்திக்கு உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய மேயா் எஸ்.ஏ.சத்யா.
ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காந்திக்கு உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய மேயா் எஸ்.ஏ.சத்யா.

75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முறையாக மேயா் எஸ்.ஏ.சத்யா தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிா் நீத்த தியாகிகளை நினைவு கூா்ந்து மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன், துணை மேயா் சி.ஆனந்தய்யா ஆகியோா் உரையாற்றினா்.

மண்டலத் தலைவா் ரவி, மாமன்ற உறுப்பினா்கள் எம்.கே.வெங்கடேஷ், சென்னீரப்பா, பொறியாளா் ராஜேந்திரன், மேலாளா் சரவணன், இளநிலை உதவியாளா் நாராயணன், மாநகர ஊழியா்களுக்கு சுதந்திர தினத்தையொட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் தேன்மொழி, டிஎஸ்பி அலுவலகத்தில் ஏ.எஸ்.பி. அரவிந்தன், மாவட்ட வன அலுவலககத்தில் வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயினி, ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் முதல்வா் ஜி.ரங்கநாத், பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் நிறுவனத் தலைவா் பெ.குமாா், ஜான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், கெலமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தளி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் ஆகியோா் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com