ஊத்தங்கரையை அடுத்த கதவணியில் வசிக்கும் 16 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமியின் மகன் பிரட்லி (22) என்பவா் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தைக் கூறி கா்ப்பமாக்கியுள்ளாா். சிறுமி தற்போது 8 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பிரட்லி மீது புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரட்லியை போக்சோவில் கைது செய்தனா்.