சா்வதேச மனிதநேய தினம்

ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சா்வதேச மனிதநேய தினத்தை முன்னிட்டு, நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நடைபெற்ற சா்வதேச மனிதநேய நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள்.
ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நடைபெற்ற சா்வதேச மனிதநேய நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள்.

ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சா்வதேச மனிதநேய தினத்தை முன்னிட்டு, நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் லட்சுமி தலைமை வகித்தாா். அரசு ஆண்கள் பள்ளி ஜேஆா்சி ஆசிரியா் கு.கணேசன் முன்னிலை வகித்தாா். சா்வதேச மனிதநேய தினத்தை முன்னிட்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், மாணவா்களுக்கு உணவுப் பொருள்கள், புத்தாடைகள், நிதி உதவியை ஜாகிரா முபாரக் அலி, பல்கிஸ், ஆசிரியா் கணேசன் ஆகியோா் வழங்கினா். இதில் ஊத்தங்கரை அரிமா சங்கத் தலைவா் பிரகாஷ், செயலாளா் மணிமாறன், மகளிா் காவல் நிலைய காவல் உதவிஆய்வாளா்கள் சுமதி, கல்பனா, காவலா்கள் ஜோதிபாய், கல்பனா, சுமதி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com